"ராகிங்" என்ற பெயரில் முட்டி போட வைத்து 2ம் ஆண்டு மாணவரை சரமாரியாகத் தாக்கிய கொடூரம்

0 2225
"ராகிங்" என்ற பெயரில் முட்டி போட வைத்து 2ம் ஆண்டு மாணவரை சரமாரியாகத் தாக்கிய கொடூரம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் இரண்டாமாண்டு மாணவனை முட்டி போட வைத்து சரமாரியாகத் தாக்கிய சீனியர் மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த ஜெயகிரன் என்ற மாணவரை இரவு 11 மணிக்குத் தங்கள் அறைக்கு வரவழைத்த சீனியர் மாணவர்கள், அவரை முட்டி போட வைத்து, செல்போன் சார்ஜரின் ஒயர், செருப்பு, பிளாஸ்க் உள்ளிட்ட பொருட்களால் தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து ஜெயகிரன் போலீசாருக்கு அலைபேசி மூலம் புகார் அளித்ததை தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் 9 மாணவர்களையும் கைது செய்தனர். காயமடைந்த ஜெயகிரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 9 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments